Sunday 5th of May 2024 02:32:20 PM GMT

LANGUAGE - TAMIL
வவுனியா
வவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டுகள் மீட்பு!

வவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டுகள் மீட்பு!


வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் உள்ள வீட்டு காணியிலிருந்து வெடிபொருட்களை ஈச்சங்குளம் பொலிஸார் இன்றைய தினம் மீட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

வவுனியா ஈச்சங்குளம் - சாளம்பன் பகுதியில் உள்ள தனியார் காணியை அதன் உரிமையாளர் உழவியந்திரம் மூலம் பண்படுத்தியுள்ளார்.

பண்படுத்தப்பட்ட குறித்த காணியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த வீட்டு உரிமையாளர் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த பகுதியை சோதனை செய்தபோது இரண்டு மோட்டார் செல்களை அவதானித்துள்ளனர்.

எனினும் மண்ணில் புதையுண்டு மேலும் வெடிபொருட்கள் அதனுள் இருக்கலாம் என்று தெரிவித்த பொலிஸார், நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த பகுதியை ஆழமாக்கி சோதனை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE